எமக்கு அஞ்சுவதால் தேர்தலை பிற்போடுகின்றனர் முடியுமானால் நடத்திக்காட்டுங்கள் : மஹிந்த ராஜபக்ஷ

Published By: Priyatharshan

18 May, 2017 | 05:01 PM
image

(ஆர்.யசி)

மக்கள் பலம் அரசாங்கதின் பக்கம் உள்ளதென்றால் உடனடியாக தேர்தலை நடத்திக் காட்டுங்கள், எமக்கு அஞ்சுவதால் தான் தேர்தலை பிற்போட்டு வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் தந்தையான காலம் சென்ற எட்வின் சொய்சாவின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தச் சென்றவேளையிலேயே முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு இந்த கருத்தினை  தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணசபைகளை கலைக்க வேண்டிய நேரம் இதுவே. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்று மாகாணசபைகளை கலைக்க வேண்டும்.

தேர்தலை நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம் என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்ற போதிலும் தேர்தலை நடத்த அஞ்சிகின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட அவர்கள் நடத்த முடியாது தடுமாறுகின்றனர். மக்கள் பலம் எந்த பக்கம் என்பதை அறிந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் நிலைமைகள் மாறும் என்பதற்கு அமையவே தேர்தலை பிற்போட்டு வருகின்றனர்.

ஆகவே தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என நாம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம்.  அதேபோல் ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஜனநாயகத்தை முழுமையாக மீறி செயட்பட்டுப் வருகின்றனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்கள் தடுக்கப்படுகின்றது. எம்மை இராணுவ ஆட்சியாளர் என கூறிக்கொண்டு இன்று இராணுவ ஆட்சியை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59
news-image

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் 75...

2025-02-07 21:16:18
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்...

2025-02-07 20:00:55
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச்செய்ய...

2025-02-07 20:30:38