மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானம் மிக்க அணுகுமுறை அவசியம் கடற்றொழில் அமைச்சரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

Published By: Digital Desk 2

13 Dec, 2024 | 09:54 PM
image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளைக் கையாள்வதில் மனிதாபிமானம் மிக்கதும் வினைத்திறனுடனானதுமான அணுகுமுறையை வலியுறுத்தியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலை குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோருடன் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது இந்திய உயர்ஸ்தானிகர் மீனவர் விவகாரங்களைக் கையாள்வதில் மனிதாபிமானமிக்கதும் வினைத்திறனுடனானதுமான அணுகுமுறையினை வலியுறுத்தியிருந்தார். அத்துடன் கைதான மீனவர்களின் விரைவான விடுதலைக்கும் கோரிக்கைவிடுக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வட மாகாண மக்களுக்காக இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பு குறித்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், மீன்பிடித்துறையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி உதவித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இழுவைப்படகு முறைமையைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டால் மாத்திரமே மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண முடியும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36