தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புஷ்பா 2 பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் காவல்துறையினர் இன்று வெள்ளிக்கிழமை (13) அல்லு அர்ஜுனை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 5ம் திகதி புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.
இதற்காக ஹைதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். பின்னர், அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது.
இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் மீதும், அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்த சந்தியா தியேட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததற்காக, திரையரங்க நிர்வாகிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM