(என்.வீ.ஏ.)
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று ஆரம்பமான அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியின் 4ஆவது ஆட்டம் மழையினால் இடையில் கைவிடப்பட்டது.
கண்டி போல்ட்ஸ் அணிக்கும் நுவர எலிய கிங்ஸ் அணிக்கும் இடையில் கண்டி பல்லேகலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற லங்கா ரி10 சுப்பர் லீக் (L T10 S L) போட்டியே மழை காரணமாக 3.3 ஓவர்களில் கைவிடப்பட்டது.
நேற்றைய தினமும் நுவர எலிய கிங்ஸ் விளையாடிய போட்டி மழையினால் தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கண்டி போல்ட்ஸ் 3.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
ஆட்டம் தடைப்பட்டபோது பெத்தும் நிஸ்ஸன்க 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சந்தர்போல் ஹேம்ராஜ் 7 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் போட்டி கைவிடப்பட்டது.
பந்துவீச்சில் பெனி ஹவெல் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM