கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.ஐ. வஹாப்தீன் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். ஆட்களை வெளிநாட்டு கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக அனுப்பிய குற்றச்சாட்டுக்கெதிராக நீர்கொழும்பு நீதிமன்றினால் இவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கபட்டிருந்தது. இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த சந்தேக நபர் புதன்கிழமை பொத்துவில் கோமாரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.ஐ. வஹாப்தீன் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர் செய்த போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தர விட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM