பருத்தித்துறையில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் தாயே உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரை உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில், காய்ச்சல் குணமடையாத காரணத்தால் திங்கட்கிழமை (09) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டமையால் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM