கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று புதன்கிழமை (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
மத்திய முகாம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 43 மற்றும் 39 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியிலிருந்து பேருந்து ஊடாக கடத்தப்பட்டு, பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM