சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்...! - சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள் - என்.பி.சி

Published By: Rajeeban

11 Dec, 2024 | 01:22 PM
image

சிரிய தலைநகரின் புறநகர் பகுதியில் - நீண்ட கால சர்வாதிகாரியின் பிடியிலிருந்து நாடு விடுபடுவதற்கு குறித்த நம்பிக்கைகளின் மத்தியில் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாக காணப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சிறைச்சாலைக்கு விரைந்தவண்ணமிருந்தனர்.

கண்ணிற்கு தெரியாத ஆழத்தில் காணாமல்போய்விட்டதாக, அவர்கள் கருதும் தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளங்கள் ஏதாவது உள்ளதா என்பதை அறிவதற்காககவே அவர்கள் அந்த சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

மனித உரிமை மீறல்களிற்கு பெயர் போன  அந்த சிறைச்சாலை தரிசு பாலை நிலங்களில் காணப்படுகின்றது.

சைட்னயா சிறைச்சாலை என்பது மனிதகொலைக்கூடாரம் என பெயரிடப்பட்ட சிரிய கொன்கீரிட் கட்டிடங்களின் நிலவறையாகும்.

என்பிசி செவ்வாய்கிழமை அங்கு சென்றபோது சிறைச்சாலையில் மிகவும் காட்டுமிராண்டிதனமான சூழல் காணப்பட்டமைக்கான தடயங்களையும் தங்கள் நேசத்திற்குரியவர்களை தேடும் மக்களின் இயலாமையையும் கண்ணுற்றது.

அசாத்தின் 50 வருட ஆட்சிக்காலத்தின் போது சைட்னயா போன்ற சிறைக்கூடங்களை ஆயுதமேந்திய படையினர் பாதுகாத்தனர், உள்ளே சென்றவர்கள் வெளியே வரவில்லை என்பதை உறுதி செய்தனர்.

பொதுமக்களை தடுத்துவைப்பதற்கும்,சித்திரவதை செய்வதற்கும் ஆயிரக்கணக்கான சிரிய மக்களை கொலை செய்வதற்கும் இந்த சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டது என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும்,போலி குற்றச்சாட்டு சுமத்தப்;பட்டவர்களும் இந்த நிலைக்கு ஆளானார்கள் என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போது பசார் அல் அசாத் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் சைட்னயா சிறையின் வாயில் நூற்றுக்கணக்கான கார்களால் நிரம்பி காணப்பட்டது.

சிரியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என பார்ப்பதற்கு வந்திருந்தனர்.

பட்டினி நிலையில் உள்ள கைதிகளை இரகசியபிரிவொன்று தடுத்துவைத்துள்ளது என்ற வதந்தியும் இதற்கு காரணம்.

அவர்கள் இரும்புதடிகள் கோடாரிகள் போன்றவற்றுடன் வந்திருந்தனர்.

ஒரு கட்டத்தி;ல் ஒரு புல்டோசரும் வந்தது,கடத்தப்பட்டவர்களை மீட்கும் நம்பிக்கையில் பொதுமக்கள் சிறையின் சில பகுதிகளை உடைத்தனர்.

அங்கு பெருமளவானவர்கள் காணப்பட்டனர், அனேகமாக ஆண்கள், சிலர் யாராவது அசாத் அரசாங்கத்தினால் தடுத்துவைக்கப்பட்டவர்களை பார்த்தீர்களா என கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்.

தன்னைதானே ஏற்பாட்டாளர் என நியமித்துக்கொண்டிருந்த நபர் நிர்வாக நடவடிக்கைகளிற்கு பொறுப்பான அறையில்மீட்கப்பட்ட ஆவணமொன்றை வைத்துக்கொண்டு அதிலிருந்த பெயர்களை உரத்து தெரிவித்துக்கொண்டிருந்தார்.

இந்த ஆவணங்கள் தரை முழுவதும் சிதறிக்கிடப்பதை காணமுடிகின்றது.இந்த ஆதாரங்களை பாதுகாப்பது அவசியம் என சர்வதேச சட்ட வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த இடங்கள் சிரிய மக்களை பொறுத்தவரை இரகசியமானவை இல்லை.அவர்கள் நன்கு அறிந்த இடங்கள் மனித உரிமை அமைப்புகள் இவ்வாறான இடங்கள் குறித்து நன்கு பதிவு செய்துள்ளன.

எனினும் செவ்வாய்கிழமை தீவிரஉணர்ச்சிகள் வெளியாகின, பதவிகவிழ்க்கப்பட்ட சர்வாதிகார ஆட்சியின் அடையாளங்களை முதல்தடவையாக பார்த்தவேளை மக்கள் கண்ணீர்விட்டு கதறினர்,அலறினர்.

உள்ளே வெள்ளை நிற கம்பிகளை கொண்ட சிறைக்கூடங்கள் காணப்பட்டன, அந்த சிறைக்கூடங்களிற்குள் நால்வர் மாத்திரம் இருக்க முடியும்,ஆனால் பெருமளவானவர்களை  அவற்றிற்குள் தடுத்துவைத்திருந்தமைக்கான அடையாளங்களை காணமுடிந்தது.

ஆதாரஙகளை தேடும் பொதுமக்களின் கையடக்க தொலைபேசிகளின் வெளிச்சம் காரணமாக அந்த சிறைக்கூடங்களிற்குள் ஆடைகள் குவியலாக காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

தனது மகன் காணாமல்போய் ஒரு தசாப்தமாகின்றது என தெரிவித்த பெண்ணொருவர் அவரை போராளி என குற்றம்சாட்டினார்கள் ஆனால் அவர் ஒரு ஆண்தாதி என்றார்.

ஒரு அறையில் இரண்டு தட்டையான மேற்பரப்புகளை உள்ளடக்கிய இரும்புசாதனம் காணப்பட்டது, கைதியொருவரை பொருத்தும் அளவிற்கு பெரியது. இறுக்கமாக மூடுவதற்கான பொறிமுறையும் காணப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களை நசுக்கி கொலை செய்வதற்கு அல்லது சித்திரவதை செய்வதற்கு இதனை பயன்படுத்தினார்கள் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மற்றொரு அறையில் ஒரு சுவரிலிருந்து மற்றைய சுவரிற்கு நீண்டிருந்த உலோக கம்பத்தை பார்க்க முடிந்தது,கைதிகளின் கரங்களை இந்த உலோக கம்பத்தில் சேர்த்து கட்டுவார்கள் கால்கள் கீழே தொங்கிக்கொண்டிருக்கும்,தாக்குவார்கள்.

வெளியே ஒருவர் நான்குகயிறுகளை வைத்திருந்தார்,அவற்றில் ஒன்றில்இரத்தம் காணப்பட்டது,அதனை மக்களை கொலைசெய்வதற்கு பயன்படுத்தினார்கள் என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சிக்காரர்கள் சிரிய தலைநகரை கைப்பற்றியவேளை சைடயன்யா சிறைச்சாலையிலிருந்து பலரை விடுவித்ததாக தெரிவித்தனர்.பெண்கள் சிறைக்கூடத்திலிருந்து வெளியேறுவதற்கு தயங்குவதை வீடியோக்கள்காண்பித்தன, தங்களை சித்திரவதை செய்த சர்வாதிகாரி வீழ்த்தப்பட்டான் என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர்.

அந்த சிறைச்சாலையில் இரகசியநிலவரைகள் காணப்படுகின்றன என்ற வதந்திகள் காரணமாக அதிகளவு மக்கள் அந்த சிறைச்சாலையை நோக்கி செல்ல தொடங்கினார்கள்.வைட்ஹெல்மட் என்ற அமைப்பும் மீட்பு குழுக்களும் கூட தேடுதல் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மைக்காக மௌனமாக்கப்பட்டார்:பத்திரிகையாளர் சுகிர்தராஜனிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

2025-01-24 20:40:09
news-image

அமைதியான தொற்றுநோயாக  மாணவர்களிடையே காணப்படும் மனநலச்...

2025-01-24 13:53:49
news-image

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று...

2025-01-24 13:31:38
news-image

விவசாய தொழில்முனைவு / வேளாண்மை நோக்கி...

2025-01-23 16:12:24
news-image

புதிய அரசியலமைப்பில் செனட் சபை? தவறுகளிலிருந்து...

2025-01-23 16:49:05
news-image

இலங்கையில் சமூக பணி

2025-01-23 11:56:18
news-image

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்...

2025-01-23 10:45:23
news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15