பாடசாலை சீருடை துணிகள் சீன தூதுவரால் பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Published By: Digital Desk 7

11 Dec, 2024 | 01:17 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை துணிகள் சீன தூதுவரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்குவதில் சீனாவின் ஒத்துழைப்பு அளப்பரியது என சுட்டிக்காட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.  

2025ஆம் ஆண்டுக்கான 4,640,086 பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 11,817 மீற்றர் (மில்லியன்) பாடசாலை சீருடை துணிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் அண்மையில் உறுதியளித்திருந்தது.

குறித்த பாடசாலை சீருடை துணிகளை மூன்று கட்டங்களாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய பாடசாலை சீருடை அடங்கிய முதல் இரு கொள்கலன்கள் கொண்ட சீன கப்பல் நாட்டை வந்ததடைந்ததுடன் மூன்றாவது கொள்கலன் அடங்கிய கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் வைத்து சீன தூதுவர் கீ ஜெங் ஹாங்வினால் பிரதமரும்  கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது. சீன தூதுவர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, 

எமது நாட்டிற்கு கல்வி மிகவும் முக்கியமானது. எமது அரசாங்கமும் அதற்கு முன்னுரிமை அளிக்கிறது. எமது நாட்டின் அபிவிருத்திக்கு  கல்வி ஒரு அடிப்படை வழியாக காணப்படுகிறது. எந்தவொரு சமூக - பொருளாதார வேறுபாடு அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கல்வியை அணுக கல்வியில் முதலீடு செய்வது அவசியமாகும். அதற்கான பல கருத்திட்டங்களை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்குவதில் சீனாவின்  ஒத்துழைப்பு அளப்பரியது. காரணம், நாம் இதற்கு நிதி திரட்ட வேண்டி ஏற்பட்டிருக்கும்.

அடுத்த வருடத்துக்கு அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.  

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர சேனவிரத்ன, கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31