புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் கடந்த 09 ஆம் திகதி தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து 800,000 ரூபா பணம் மற்றும் 1,490,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், தங்கச் சங்கிலி , தங்கத் தோடுகள், தங்க மோதிரம், தங்க வளையல் மற்றும் 461,950 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM