புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபாவை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட தீர்மானம் - ஐ.தே.க தவிசாளர்

11 Dec, 2024 | 02:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய ஜனநாயக முன்னணி செயலாளருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. பைசர் முஸ்தபாவை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி முறையான தீர்மானம் எடுக்கவிருக்கிறாேம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவின் பெயரை அந்த கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளமை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்த சந்தர்ப்பத்தில் பங்காளி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தோம்.

அதன் பிரகாரம், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயருடைய கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய தீர்மானித்தோம். 

அந்த முன்னணியின் செயலாளராக ஷர்மிலா பெரேராவுக்கு இந்த இணக்கப்பாடுகள் அடங்கிய ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது.

என்றாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரதி பங்காளி கட்சிகள் எவருக்கும் இதுவரை வழங்கவில்லை. ஒப்பந்தத்தை சமர்ப்பிக்கும் நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டியது புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி தலைவர்களால் ஆகும். புதிய ஜனநாயக முன்னணி செயலாளருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

அந்த தீர்மானத்தை மீறி தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி நிரப்புவது  நம்பகத்தன்மையை முற்றாக மீறும் செயலாகும். அரசியல் திருட்டுச்செயலாகும். ரவி கருணாநாயக்கவின் நியமனம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதுடன் அது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி முறையான தீர்மானம் எடுக்கவிருக்கிறாேம் என்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25