சபாநாயகர் தனது கல்வித் தகைமை தொடர்பில் விரைவில் அறிவிப்பார் - அமைச்சரவைப் பேச்சாளர்

10 Dec, 2024 | 06:24 PM
image

(எம்.மனோசித்ரா)

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இன்னும் சில நாட்களில் அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனது உயர்கல்வி தகைமை தொடர்பில் சபாநாயகர் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார். அவரால் வெளியிடப்படும் அறிக்கைக்கு அமையவே அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். வெளியான செய்திகள் உண்மையானாலும் போலியானவை என்றாலும் அவற்றுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெறுபேறுகளின் அடிப்படையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், கூற்றுக்கள் உண்மையாகவும் பொய்யானதாகவும் இருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகைமைகள் குறித்து பாராளுமன்ற இணையத்தளத்தில் ஆரம்பத்தில் 'கலாநிதி' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் முகநூலில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரன்வல தனது கல்வித் தகையை நிரூபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நிரூபிக்க தவறினால் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பாராளுமன்ற இணையதளத்தில் 'கலாநிதி' என்ற சொல் சபாநாயகரின் பெயருக்கு அருகிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24