அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு - ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம்

Published By: Digital Desk 7

10 Dec, 2024 | 06:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து,  அரிசி உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் மொத்த விலையை நிர்ணயித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும். இல்லையேல் சந்தையில் மீண்டும் நெருக்கடி ஏற்படும் ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள  ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (10)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயம் பிரச்சினைக்குரியதாக உள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ள நிலையில் எடுக்கப்படும் தீர்மானங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் ஒருசில அரச அதிகாரிகள் செயற்படுவது அவதானத்துக்குரியது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி சிக்களுக்குரியதாக காணப்படுகிறது. 225 ரூபா மொத்த விலைக்கு அரிசியை கொள்வனவு செய்வதற்கும், அவற்றை 225 ரூபாவுக்கு விற்பனை செய்யவும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானத்தினால் மொத்த வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (09) நுகர்வோர் அதிகார சபையுடன் கலந்துரையாடினோம். அரிசிக்கான விலை தொடர்பில் எமது தரப்பு நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம்.இருப்பினும் நுகர்வோர் அதிகார சபை முரண்பட்ட வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மொத்த மற்றும் சில்லறை விலை என்ற அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதை போன்று அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆகவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00
news-image

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்....

2025-01-24 15:58:31