(எம்.மனோசித்ரா)
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவை நியமிக்க உத்தியோகபூர்வமாக பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. எவ்வாறிருப்பினும் இந்த நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த முடிவு குறித்து கட்சியால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவிக்காமலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியில் மூவர் வெற்றி பெற்றதோடு, இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன. கடந்த நவம்பரில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒருவராக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் இந்த தீர்மானம் கட்சிக்கு அறிவிக்கப்படாமல் புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளரால் தன்னிச்சையாகவே எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டதோடு, விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ரவி கருணாநாயக்க மற்றும் தலதா அத்துகோரள போன்ற அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் உட்பட பல குறிப்பிடத்தக்க பெயர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தன. எனினும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக முன்வைக்கப்பட்ட நிலையில் பைசர் முஸ்தபாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM