பலன்களை அள்ளித் தரும் பிரத்யேக கார்த்திகை தீப வழிபாடு

Published By: Digital Desk 2

10 Dec, 2024 | 04:09 PM
image

மாதங்களில் கார்த்திகை மாதம் சிவ வழிபாட்டிற்கு உரிய மாதம். இந்த மாதத்தில் வரும் கார்த்திகை நாளன்று சிவபெருமான் ஜோதி ரூபமாக தரிசனம் அளித்த நாள். இதனால் இம்மாதம் முழுவதும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களது வீட்டில் தீபமேற்றி வழிபாட்டை மேற்கொள்வார்கள். 

நடைமுறை சிக்கல்கள் மற்றும் பல்வேறு அசௌகரியங்களால் எம்மில் பலருக்கும் நாளாந்தம் தீபம் ஏற்றி வழிபட முடிவதில்லை. இதனால் எம்முடைய முன்னோர்கள் இம்மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் தீபத்தை விசேடமாக ஏற்றி வழிபட்டால் உங்களுக்கு பரிபூரண பலன் கிடைக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் மண்ணாலான புதிய அகல் விளக்கு (27), நல்லெண்ணெய் அல்லது நெய், திரி, பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலக்காய், வெள்ளருக்கு வேர்.

கார்த்திகை தீபத் திருநாள்- இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று வருகிறது. இதனால் தீபம் ஏற்றி வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைப்பது உறுதியாகிறது. அன்று மாலை அபிஜித் முகூர்த்த தருணத்தில் வீட்டின் பூஜையறை ,வரவேற்பறை ,நிலை வாசல் , படுக்கையறை,  மொட்டை மாடி,  சுற்றுச்சுவர்  , என பல்வேறு இடங்களிலும் எண்ணிலடங்காத வகையில் தீபமேற்றி தீபத்திருநாளை கொண்டாடலாம். 

இருப்பினும் சுப பலன்கள் கிடைப்பதற்கு மாலை வேளையில் வாசல் மற்றும் பூஜை அறை ஆகிய இரண்டையும் இணைத்து மொத்தம் 27 மண்ணாலான புதிய அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, அதனுடன் சிறிதளவு வெள்ளருக்கு வேர், ஒரு கிராம்பு ,ஒரு ஏலக்காய் ,சிறிதளவு பச்சை கற்பூரம் , ஆகியவற்றை கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும். 

இப்படி 27 அகல் விளக்குகளிலும் செய்யலாம் அல்லது ஒரே ஒரு விளக்கில் மட்டும் இதனை மேற்கொள்ளலாம். இப்படி செய்து மகாலட்சுமியையும், சிவபெருமானையும் மனதுள் ஒருமுக சிந்தனையுடன் வணங்கினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சுப பலன்கள் அனைத்தும் விரைவில் கிடைக்கும். 

இந்த பிரத்யேக தீப வழிபாட்டை கார்த்திகை நாளன்று மேற்கொள்வது உத்தமம். கார்த்திகை மாதம் முழுவதும் இதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும் இதனை கார்த்திகை தீபத்திற்கு பிறகு தொடர்ச்சியாக கார்த்திகை மாதம் முழுவதும் மேலே கூறியபடி பிரத்யேகமான முறையில் தீபமேற்றி சிவபெருமானை வழிபட்டால் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும் என்பது உறுதி.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14
news-image

கடனை தீர்ப்பதற்கு உதவும் நெல்லிக்காய்..!?

2024-12-30 13:02:21