விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க நீண்டகால திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் - அரசாங்கம்

10 Dec, 2024 | 03:37 PM
image

(எம்.மனோசித்ரா)

குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளால் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நீண்ட கால தீர்வினை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  விவசாயத்தை பாதுகாக்கும் அதேவேளை, விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளால் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பரவலாகப் பேசப்படுகின்றது.

 சூழலியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இது தொடர்பில் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. உண்மையில் இந்த பிரச்சினைக்கு தீர்வினை எவ்வாறு பெறுவது தொடர்பிலேயே தற்போது கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது.

விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலேயே விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 

விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்களால் சில பிரதேசங்களில் மக்கள் தமது குடியிருப்புக்களைக் கூட கைவிட்டுச் செல்லும் நிலைமையும் காணப்படுகிறது. 

இதற்கு தீர்வினை வழங்குவதற்கு விவசாயத்துறை அமைச்சினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுற்றாடல் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள் இணைந்து இந்த பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 இது மிகவும் சிக்கலான விடயமாகும். சூழல் சமநிலையின்மையே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாகும். 

விவசாயத்தை பாதுகாக்கும் அதேவேளை, விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் விரைவில் நீண்ட கால தீர்வு முன்வைக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44