(க.கிஷாந்தன்)
நுவரெலியா, பொகவந்தலாவை பிரதேசத்தில் என்.சி போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள் சிறிய பொதிகளாக பொதியிடப்பட்டு, ஒரு பொதி 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி என்ற போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொகவந்தலாவை பிரிட்வேல் தோட்டத்தில் வசிப்பவர் ஆவார்.
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்ட போது வீட்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்றரை கிலோ கிராம் என்.சி போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM