வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய நபருக்கு விளக்கமறியல்!

10 Dec, 2024 | 03:11 PM
image

நுகேகொடை பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முறைப்பாட்டாளர் காணி ஒன்றை விற்பனை செய்வதற்காக  சமூக ஊடகங்களில் விளம்பரம் ஒன்றைப் பதிவிட்டுள்ள நிலையில் சந்தேக நபர் அந்த காணியைக் கொள்வனவு செய்யும் போர்வையில் முறைப்பாட்டாளரிடமிருந்து வங்கிக் கணக்கைப் பெற்றுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் மேலும் சில நபர்களுடன் இணைந்து முறைப்பாட்டாளரின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடியுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44