கடுவலை, ஹேவாகம பிரதேசத்தில் வீதியில் பயணித்த நபரொருவரை மோதி தப்பி செல்ல முயன்ற கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நபரொருவரை காரில் மோதி கொலை செய்வதற்கு முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த காரை நிறுத்துமாறு காரின் சாரதிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதன்போது, காரில் பயணித்த சந்தேக நபர்கள் பொலிஸ் உத்தரவையும் மீறி அங்கிருந்து தப்பிச ்செல்ல முயன்றதால் பொலிஸார் கார் மீது இரு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும் சந்தேக நபர்கள் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM