பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள் - அரசாங்கத்திடம் மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தல்

Published By: Vishnu

10 Dec, 2024 | 02:14 AM
image

(நா.தனுஜா)

சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தரிந்து உடுவரகெதர வலியுறுத்தியுள்ளார்.

அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியினால் திங்கட்கிழமை (9) கொழும்பு லயன்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரிசி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிரடித் தீர்மானங்களை மேற்கொள்வதைப் பார்த்தோம். ஆனால் சந்தையில் அரிசி இல்லை. இருக்கின்ற அரிசியின் அளவு போதுமானதாக இல்லை தற்போது அரிசி தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த ஆண்டுகளில் நாம் தேவையை விட அதிகமாக அரிசியை உற்பத்தி செய்திருக்கிறோம். அவ்வாறிருக்கையில் இப்போது அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பேரளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசியைத் திட்டமிட்டுப் பதுக்கியிருக்கிறார்கள். அதனூடாக அவர்கள் அதிக இலாபமீட்டுவதற்கு முனைகிறார்கள். இலங்கையின் நுகர்வோர் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் பொருட்களை விற்பனை செய்யாமல் பதுக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் தற்போது இச்சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆகையிலேயே உற்பத்தியாளர்கள் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

இப்போது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு அமைவாக அரிசி உற்பத்தியாளர்கள் ஒரு கிலோ அரிசி விற்பனையின் ஊடாக 50 ரூபாவுக்கும் மேல் வருமானமீட்டுகிறார்கள். அவ்வாறிருக்கையில் டட்லி சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுகிறார்.

 இந்நிலையில் அதிகாரிகள் ஊடாக அரிசி ஆலைகளில் சோதனை நடாத்தவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வேடிக்கை நடவடிக்கைகள் அவசியமற்றவை. மாறாக மந்தபோசணை உயர்வாகக் காணப்படும் இலங்கையில், இனினும் அரிசி உற்பத்தியை வியாபாரமாக மாற்ற இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24