இரத்தினபுரி மாவட்ட கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல, ஒபநாயக்க, வெலிகபொல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன கடிதம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதோடு, நியமனத்தை பெற்றுக்கொண்ட பின் பிரதி அமைச்சர் பிரதீப் கருத்து தெரிவிக்கையில்,
"கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினர் மக்கள் சேவையினை "மாற்றாந்தாய் மனப்பான்மையோடு" சேவைகளை மேற்கொண்டனர்.
இனிவரும் காலங்களில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சகல அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்வதோடு அவற்றை பின்தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிவகைகளை மேற்கொள்வதோடு சகல மக்களுக்கும் இன, மத ,மொழி , பிரதேச வாதம் கடந்து மேற்கொள்வேன்" என தெரிவித்தார்.
பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்க பிரதீப், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளதுடன் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM