கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் நேற்று சனிக்கிழமை (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராதனை பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் கிரிபத்கும்புர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 40 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுஹும்பால பகுதியில் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கண்டி முகாம் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM