வவுனியா நகரம் மற்றும் நகரை அண்மித்த சில பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது டயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என்பவை பல இடங்களில் காணப்பட்டதுடன், அந்த பொருட்களுக்குள் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகளும் இனங்காணப்பட்டன.
நுளம்பு குடம்பிகள் உருவாகுமளவு சூழலை அசுத்தமாக வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேவேளை, டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அவற்றை சூழவுள்ள பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM