அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை - வசந்த சமரசிங்க

08 Dec, 2024 | 05:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரிசி மற்றும் தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவாது என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

சந்தையில் நிலவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பல்வேறு காரணிகளால் அரிசி மற்றும் தேங்காய் ஆகிய உணவு பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளன. அரிசி தட்டுப்பாட்டுக்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அரிசி மற்றும் தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவாது. பெரும்போக விவசாயத்துக்கு தேவையான வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படும். பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைக்க உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05
news-image

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா...

2025-02-19 16:33:31
news-image

அம்பாறை - வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியில்...

2025-02-19 16:22:06
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 16:23:48
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 17:17:11
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 17:22:20
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22