கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லக் கதிர்காமம் பகுதியில் உள்ள அக்கரவிஸ்ஸ வாவியில் நேற்று சனிக்கிழமை (07) படகு கவிழ்ந்து இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஆவார்.
அவர் மூன்று நண்பர்களுடன் படகினை செலுத்திக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்துள்ளது.
இதில் படகில் பயணித்த மூன்று நண்பர்கள் நீந்தி கரை சேர்ந்துள்ளதாகவும் படகினை செலுத்தியவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கதிர்காமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM