19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ்

06 Dec, 2024 | 05:29 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவும் பங்களாதேஷும் தகுதிபெற்றன.

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில்  இன்று நடைபெற்ற ஓர் அரை இறுதிப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்களால் இந்தியாவும், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்களால் பங்களாதேஷும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இந்தியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை இளையோர் அணி 8 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது 3 விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர். ஆனால், அது போதுமானதாக அமையவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் பிரகாசிக்கவில்லை.

லக்வின் 69 ஓட்டங்களையும் சண்முகநாதன் ஷாருஜன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சேத்தன் ஷர்மா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 21.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் றோயல்ஸினால் ஐபிஎல் ஏலத்தில் 1.1 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்ட 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷி 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார்.

பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டியில் மிகவும் இலகுவாக 7 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.

ஏ குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பாகிஸ்தான் வெற்றிபெறும் என எதிர்பாரக்கப்பட்டது.

ஆனால், மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 22.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இறுதிப் போட்டி துபாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08