கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு பயணித்த 3 மோட்டார் சைக்கிள்கள் வீதியில் நின்ற எருமை மாடுகள் மீது மோதியதில் 5 இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, எருமை மாடொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஐந்து பேர் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்களும் அதிவேகமாக சென்று, வீதியில் நின்ற எருமை மாடுகளின் மீது மோதியுள்ளன.
இதில், ஒரு எருமை மாடு உயிரிழந்துள்ளதுடன், நான்கு எருமை மாடுகள் காயமடைந்துள்ளன.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஐந்து இளைஞர்களும் காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்குடா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM