எருமை மாடுகள் மீது மோதிய மோட்டார் சைக்கிள்கள்! - எருமை பலி - 5 பேர் காயம்!

06 Dec, 2024 | 01:28 PM
image

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு பயணித்த 3 மோட்டார் சைக்கிள்கள் வீதியில் நின்ற எருமை மாடுகள் மீது மோதியதில் 5 இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, எருமை மாடொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

ஐந்து பேர் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்களும் அதிவேகமாக சென்று, வீதியில் நின்ற எருமை மாடுகளின் மீது மோதியுள்ளன.

இதில், ஒரு எருமை மாடு உயிரிழந்துள்ளதுடன், நான்கு எருமை மாடுகள் காயமடைந்துள்ளன.

மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஐந்து இளைஞர்களும் காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்குடா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59