கிணற்றில் வீழ்ந்த பென்சிலை எடுக்க இறங்கிய மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் பருத்தித்துறை - திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் 05 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் ரஜீவன் சுஜீ என்கின்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குழந்தை தனது கையில் பென்சில் ஒன்றுடன் சென்றுகொண்டிருந்தபோது பென்சில் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளது.
அதனை எடுப்பதற்காக குறித்த கிணற்றில் இறங்கிய வேளை குழந்தை நீரில் மூழ்கியது. குழந்தையை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM