(எம்.ஆர்.எம் வசீம் , இராஜதுரை ஹஷான்)
74 ஆண்டு கால அரசியலை நாங்கள் சபிக்கவில்லை. மாறாக 74 ஆண்டுகால ஆட்சியின் பொருளாதார நெருக்கடிகளையே சுட்டிக்காட்டினோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் அரசாங்கம் செல்லவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டிவிட்டதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது தவறானது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும், முஸ்லிம் சமூகத்தினர் தாடி வளர்க்க முடியாது, போயாவுக்கு விகாரைக்கு செல்ல முடியாது. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகள் மறுக்கப்படும் என்று யார் வெறுப்பினை தூண்டி விட்டது. எதிர்தரப்பினரே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் வெறுப்பினை தூண்டிவிடவில்லை. 74 ஆண்டுகால அரசியல் சாபம் என்று குறிப்பிடவில்லை. மாறாக 74 ஆண்டுகால ஆட்சியினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையே விமர்சித்தோம். ஆகவே மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை குறிப்பிடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் சென்ற பாதையில் தற்போதைய அரசாங்கம் செல்வதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பாதையை ஆராய வேண்டும். 1977 முதல் 1994 , 2001 முதல் 2003 , 2015 முதல் 2019 மற்றும் 2022 -2024 என்ற காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்ற அடிப்படையில் பதவி வகித்துள்ளார்.
அரச வளங்களை தனியார் மயப்படுத்துவதும், மிகுதியான வளங்களை விற்பதும் தான் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை .இவரது அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை இந்த நாட்டுக்கு எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஆராய வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு இணக்கமான கொள்கைகளையே எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணான கொள்கைகளை நாங்கள் முன்வைத்ததால் தான் மக்கள் எமக்கு ஆதரவளித்தார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM