சுழிபுரம் விபத்தில் சிக்கிய இரு மாணவர்கள் - ஒருவர் உயிரிழப்பு : நோயாளர் காவு வண்டியின் அசமந்தப் போக்கு

05 Dec, 2024 | 11:53 AM
image

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த 15 வயதுடைய மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார். 

சுழிபுரத்திலிருந்து மூளாய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சுழிபுரம் சந்தியில் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில்  மோதியுள்ளது. 

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளார். 

மாணவர்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் வீதியில் கிடந்த நிலையில், வீதியால் பயணித்தவர்கள் நோயாளர் காவு வண்டிக்கும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். 

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நோயாளர் காவு வண்டி மாணவர்களை கொண்டுசெல்ல வராததோடு, வீதியால் பயணித்த வேறு வாகனங்களும் மாணவர்களை ஏற்ற பின்வாங்கியுள்ளன.

நீண்ட நேர பரிதவிப்பின் பின்னர், அங்கிருந்தவர்கள் பட்டா ரக வாகனமொன்றில் மாணவர்களை ஏற்றி, மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

வைத்தியசாலையில் மாணவர்களை பரிசோதித்த வைத்தியர்கள், ஒரு மாணவன் முன்னதாக உயிரிழந்துவிட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டனர். 

இதேவேளை, படுகாயமடைந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

பட்டா வாகனத்தில் மாணவர்கள் கொண்டுசெல்லப்பட்ட பின்னர், நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்துக்கு வந்தடைந்தது. 

இந்நிலையில், மகன் விபத்துக்குள்ளாகியிருப்பதை கண்டு, விபத்து இடம்பெற்ற இடத்தில் மயங்கி விழுந்த தாயொருவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல கேட்கப்பட்டபோதும், அவரை ஏற்றிச்செல்ல நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் மறுத்துவிட்டு, திரும்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வட்டுக்கோட்டை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29