(எம்.மனோசித்ரா)
அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால இராணுவ சட்டத்தை தளர்த்துவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்தமை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
கொரிய பாராளுமன்றம் இராணுவச் சட்டத்தை தளர்த்துவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமை வரவேற்கத்தக்கது.
பாராளுமன்றத்தின் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும்.
ஜனாதிபதி யூன் சுக் யெப்பின் இராணுவச் சட்டத்தின் பிரகடனம் கொரிய ஜனநாயக அமைப்பை அச்சுறுத்தியது.
எதிர்க்கட்சிகள் மற்றும் நிர்வாகத்தை ஆதரிப்பவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும் பாராளுமன்றம் காட்டும் ஒற்றுமை நிச்சயமாக சர்வதேச அங்கீகாரத்திற்கு தகுதியானது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் பாராளுமன்றத்தின் பலத்தை இது காட்டுகிறது.
இந்த அரசியலமைப்பு நெருக்கடியை அமைதியான முறையில் தீர்ப்பது கொரிய குடியரசின் நலனுக்குரியது.
தென்கொரிய ஜனாதிபதியால் அங்கு அவசரகால இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் குறித்த சட்டத்தை தளர்த்துவதற்கான யோசனை தென்கொரி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை அதனை தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதியும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM