தென்கொரிய பாராளுமன்றத்தின் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை சர்வதேசத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ரணில்

05 Dec, 2024 | 12:09 AM
image

(எம்.மனோசித்ரா)

அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால இராணுவ சட்டத்தை தளர்த்துவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்தமை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

கொரிய பாராளுமன்றம் இராணுவச் சட்டத்தை தளர்த்துவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமை வரவேற்கத்தக்கது. 

பாராளுமன்றத்தின் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும்.

ஜனாதிபதி யூன் சுக் யெப்பின் இராணுவச் சட்டத்தின் பிரகடனம் கொரிய ஜனநாயக அமைப்பை அச்சுறுத்தியது.

எதிர்க்கட்சிகள் மற்றும் நிர்வாகத்தை ஆதரிப்பவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும் பாராளுமன்றம் காட்டும் ஒற்றுமை நிச்சயமாக சர்வதேச அங்கீகாரத்திற்கு தகுதியானது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் பாராளுமன்றத்தின் பலத்தை இது காட்டுகிறது.

இந்த அரசியலமைப்பு நெருக்கடியை அமைதியான முறையில் தீர்ப்பது கொரிய குடியரசின் நலனுக்குரியது.

தென்கொரிய ஜனாதிபதியால் அங்கு அவசரகால இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

பின்னர் குறித்த சட்டத்தை தளர்த்துவதற்கான யோசனை தென்கொரி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை அதனை தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதியும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24