யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 42 பேரும், ஒக்டோபர் மாதம் 69 பேரும், நவம்பர் மாதம் 134 பேரும் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நாளுக்கு நாள் டெங்கு தொற்று மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றமை தெளிவாகிறது.
யாழ்ப்பாணம், கோப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை, சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் டெங்குத் தொற்று பரவி வருகிறது.
குறிப்பாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கொழும்புத் துறையிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட உரும்பிராயிலும் டெங்குத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM