மாவீரர் தின நினைவேந்தல் பதிவுகள் - கெலும் ஜெயசுமணவுக்கு பிணை - மேலும் ஒருவருக்கு விளக்கமறியல்! 

05 Dec, 2024 | 10:54 AM
image

மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பான பழைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்ட மூவரில், சமூக செயற்பாட்டாளரான கெலும் ஜெயசுமணவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் மற்றுமொருவரான பத்தேகம பகுதியைச் சேர்ந்த நபரை டிசம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இவ்வருட நினைவேந்தல் நிகழ்வுகள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பத்தேகமவைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜெயசுமண பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு புதன்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைத்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள பெண்ணொருவரின் முகநூல் பக்கத்தில் இருந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள்

அமைப்புடன் தொடர்புடைய புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து சந்தேக நபர் அதனை மீள்பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து சந்தேக நபரை இரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதவான் இந்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவது தான் இலக்கு...

2025-03-23 06:37:02
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

2025-03-23 06:37:30