அரச, தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரன்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி புறப்படத் தயாராக இருந்த அரச பேருந்து தரப்பினருக்கும் தனியார் பேருந்து தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டது.
அரச பேருந்து புறப்படுகின்ற நேரம் தொடர்பிலேயே குறித்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையப் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச்சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM