இரு குழுக்களுக்கிடையே தகராறு ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

03 Dec, 2024 | 06:07 PM
image

புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை கட்டுப்படுத்த பொலிஸார் தரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளது,  

அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மதுரங்குளி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் தனியார் காணி ஒன்றின் குறுக்கே வடிகான் அமைப்பதற்கு பிரதேசவாசிகள் சிலர் இணைந்து மதுரங்குளி பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது காணியின் உரிமையாளர் வடிகான் அமைப்பதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறை கட்டுப்படுத்த மதுரங்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 

அதன் பின்னர் தகராறை கட்டுப்படுத்த முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றும் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் பொலிஸ் அதிகாரிகள்  தகராறு காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த  தரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

சந்தேக நபர்கள் கொண்டுவந்த மூன்று உழவு இயந்திரங்கள், இரும்பு கம்பிகள், மற்றும் மரக்கட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17