மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏ-32 சாலை புனரமைப்புகள் நிறைவுற்றதுடன், கடந்த வருடம் வீதி அதிகார சபையினால் பாலியாறு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் அடுத்தவருடம் ஜுன் மாதம் இப்பால வேலைகள் நிறைவு செய்ய வேண்டிய நிலையில் , குறித்த வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது
இனிவரும் மார்கழி மாதத்தில் மழை வெள்ளம் வீதியினைக் குறுக்கறுத்துப் பாயும் போது ஏ-32 வீதி வழியான போக்குவரத்துகள் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் பாலியாறு பால வேலையினை விரைவாக நிறைவு செய்யுமாறு பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பால வேலைகள் நடைபெறுகின்ற போது பாலியாற்றின் மேற்குப் பகுதியில் வெள்ள நீர் பரவாமல் மண் அணை அமைக்கும் பணியினையும் முன்னெடுப்பதற்கு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாந்தை மேற்கில் பாலியாறு பெருக்கெடுக்கின்ற போது ஐம்பது வரையான குடும்பங்கள் பாலியாற்று மேற்கில் பாதிக்கப்படுவதாகவும் பொது அமைப்புகளினால் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM