நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று திங்கட்கிழமை (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.
எனினும் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகத்தர்கள் யாரும் செயற்படவில்லை எனவும் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக கடந்த வாரங்களில் பொது மக்களின் வருகை சற்று குறைவாக இருந்தது. தற்போது சீரான வானிலை நிலவி வருவதனால் பெருந்திரளானோர் வருகை தந்ததால் சன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM