மன்னாரில் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டிலிருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்!

Published By: Digital Desk 2

02 Dec, 2024 | 12:34 PM
image

கஞ்சா கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு மன்னார், பேசாலை பொலிஸ் நிலையத்தின் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் சிறைக் கூண்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

தப்பிச் சென்றவர் பேசாலை, பெரியகர்சல் பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய மீனவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிலோ 120 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் கீழ் பேசாலை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் குளிப்பதற்காக குளியலறைக்குச் சென்று, குளியலறையின் ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38