ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிரிக்கெட் வீரர் மகேஷ் திக்சனவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள்

Published By: Digital Desk 7

01 Dec, 2024 | 07:15 PM
image

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனவின் இரண்டு இலட்சம் ரூபா நிதி உதவியில் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டுக் கழகம் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 பொதிகளை வழங்கிவைத்தது.

ஏறாவூரில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்  நிலைப்பாட்டினை அறிந்து இலங்கை தேசிய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவிடம் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் இலங்கை பொலிஸ் அணி மற்றும் பேஷ்போல் விளையாட்டு  வீரருமான யு. நஜிவுல்லாஹ் சமூக வலைத்தளத்தின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய மகேஷ் திக்சன 2 இலட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதற்கமைய யங் ஹீரோ விளையாட்டுக் கழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 100 குழந்தைகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான பால்மா மற்றும் இதர பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தது.

இதேவேளை இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேஷ் திக்சனா வழங்கிய உயரிய மனிதநேய பணிக்கு விளையாட்டு கழகம் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14