தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவல - கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் தலங்கம வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (30) மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தலங்கம வடக்கைச் சேர்ந்த 74 வயதானவர் ஆவார்.
கடுவல பகுதியிலிருந்து பத்தரமுல்லை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்து சென்ற பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் விபத்தில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM