சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள தற்காலிக நிலையங்களுக்கு அரச அதிகாரிகள் கள விஜயம்

30 Nov, 2024 | 07:52 PM
image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்  இன்று சனிக்கிழமை (30) பல்வேறு நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். 

இதன் போது கல்லுண்டாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறை நிறைகளைக் கேட்டுக்கொண்டதுடன், உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார். 

இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, மாகாணக் காணி ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதன் பின்னர், கல்லுண்டாயில் காணிக் கச்சேரி நடாத்துவதற்கான நடிவடிக்கைகளை விரைவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் ஊடாக எடுக்க ஆவன செய்வதாக பொது மக்களுக்குத் தெரிவித்தார். 

இந்த  மக்கள் சந்திப்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஷினி மதியழகன் கலந்து கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07