எம்மில் பலரும் நாளாந்தம் பணி நிமித்தம் வீட்டிலிருந்து வெளியே சென்று அதன் பிறகு மாலையிலோ அல்லது இரவிலோ வீடு திரும்புவோம். இந்த தருணங்களில் பழகிய பாதையாக இருந்தாலும் சில தருணத்தில் தனியாக அதனை கடக்கும் போது மனதில் அச்சம் அல்லது பயம் போன்ற சலனம் ஏற்படும்.
அதே தருணத்தில் எம்மில் பலருக்கும் பில்லி, சூனியம் பற்றிய ஏதேனும் ஒருவகையினதான கருத்தியல் மனதில் இருக்கும். இந்த இரண்டு காரணிகளும் மனிதர்களின் மனதை பலவீனப்படுத்தி தனிமையாகவோ அல்லது இருளிலிலோ பிரத்யேக நிலவியல் பகுதியை கடந்து செல்லும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக நண்பர்களிடம் எடுத்துரைக்கும் போது அவர்கள் பில்லி, சூனிய பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று எளிதாக சொல்லிவிடுவார்கள்.
வேறு சிலர் தங்களது நாளாந்த நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் பில்லி, சூனியத்தின் பாதிப்பாக இருக்குமோ..! என்று சந்தேகம் கொள்ளக் கூடும்.
வேறு சிலருக்கு அவர்களின் வளர்ச்சியை பொறுக்காமல் நண்பர்களோ உறவினர்களோ அல்லது எதிரிகளோ அவர்களின் வளர்ச்சிக்கு தடை விதிக்கும் வகையில் பில்லி , சூனியம் வைத்து விடுவார்கள். இதிலிருந்து இவர்கள் தங்களுக்கு தற்காத்துக் கொள்வதற்கு போராடுவார்கள்.
இந்தத் தருணத்தில் மாதந்தோறும் சந்திராஷ்டமம் வரும் நாட்களில் மனம் அலைபாய்ந்து சஞ்சலத்திற்கு ஆளாகும். இதன் காரணமாக சிலருக்கு பில்லி சூனிய பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ..! என்று அஞ்சுவார்கள். இதனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பில்லி, சூனியம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சந்தேகம் அடைந்தாலோ அல்லது மனதில் அதுபோன்ற அச்ச உணர்வு இருந்தாலோ அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக சில சூட்சுமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
வியாழக்கிழமை தோறும் எலுமிச்சை பழம் ஒன்றை வாங்கி வந்து அதனை தலை சுற்றி இடது பாதத்திற்கு கீழ் வைத்து அழுத்தி விட வேண்டும். இதன் மூலம் உங்களையும் அறியாமல் பில்லி சூனிய பாதிப்பு இருந்தால் அதிலிருந்து விலகி விடலாம்.
மனதில் அச்ச உணர்வு இல்லாமல் இருப்பதற்கும் பில்லி சூனியம் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் வெள்ளெருக்கு வேரை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இந்த வெள்ளருக்கு வேரை உடன் வைத்திருந்தால் இத்தகைய பாதிப்பு எதுவும் எம்மை அண்டாது.
வெள்ளெருக்கு வேர் சிறிதளவு எடுத்து அதனை மோதிரமாக மாற்றி எம்முடைய இடது கையில் ஏதேனும் ஒரு விரலில் அணிந்து கொள்ளலாம். இதுவும் நமக்கு பில்லி, சூனியம் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வழங்கும் கேடயமாக திகழும்.
அதே தருணத்தில் பில்லி, சூனிய பாதிப்பு எமக்கு தெரியாமல் ஏற்பட்டிருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் மாதந்தோறும் ஒரு முறையாவது அருகில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு சென்று நீராடினால் இத்தகைய சூட்சமமான தடை அகலும்.
மலையில் இருந்து திரண்டு ஓடிவரும் நீருக்கு தோஷங்களை அகற்றும் வலிமை உள்ளது. இதனால் இத்தகைய நீர்வீழ்ச்சியில் நீராடும் போது உங்களுடைய உடல் மட்டுமல்ல உங்களுடைய மனம் மட்டுமல்ல உங்களை சுற்றி இருக்கும் ஆரா எனும் மறைமுக ஆற்றலும் புத்தாக்கம் பெறுகிறது. அத்துடன் மனமும் வலிமை அடைகிறது.
எனவே மன வலிமை இல்லாதவர்கள் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மேலே சொன்ன எளிய வழிமுறையை கடைப்பிடித்தால் உங்களுடைய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM