அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 6 மாணவர்களில் 4 மாணவனின் சடலங்கள் புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமற்போன ஏனைய இரு மாணவர்கள், மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி உதவியாளரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிந்தவூர் பிரதேசத்தில் இருந்த மதுரசா ஒன்றிலிருந்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (26) மாலை சம்மாந்துறை பிரதேசத்தை நோக்கி 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்ட விபத்திற்குள்ளானதையடுத்து வெள்ள நீரில் மூழ்கியதில் 5 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 6 மாணவர்கள் மற்றும் சாரதி, உதவியாளர் உட்பட 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காணாமல் போனவர்களைக் கடற்படையினரின் உதவியுடன் புதன்கிழமை (27) தேடும் நடவடிக்கையின் போது 4 மாணவர்களை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டனர்
இருந்தபோதும் காணாமல் போன இரு மாணவர்கள் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரையும் சீரற்ற கால நிலைக்கும் மத்தியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM