முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 7

27 Nov, 2024 | 05:35 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. 

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 243 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 73 குடும்பங்களை சேர்ந்த 229 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 438 குடும்பங்களை சேர்ந்த 1537 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 47 குடும்பங்களை சேர்ந்த 147 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 263 குடும்பங்களை சேர்ந்த 759 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 203 குடும்பங்களை சேர்ந்த 459 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று (27) பிற்பகல் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த மக்கள் ஒட்டுசுட்டான் கரிவேலன் கண்டல் அ.த.க. பாடசாலையிலும், கூழாமுறிப்பு பாடசாலையிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த மக்கள் மன்னாகண்டல் அ.த.க பாடசாலையிலும் ஏனையவர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப் பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:23:35
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08