முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றது.
அதன் போது, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது இயன்றளவு சுற்றாடல் பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுலாசார் முதலீட்டுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.
குறிப்பாக வனவளத் திணைக்களம் பிரதேச செயலர்கள், மாவட்டச் செயலர்கள் என எவருக்கும் தெரியாமல் காணிகளை தமது திணைக்களத்துக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதனால் இந்த நிலைமை ஏற்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன், வேலணை, வடமராட்சி கிழக்கு மற்றும் காரைநகர் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM