சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு எமது அரசாங்கத்தில் இடமில்லை - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

Published By: Vishnu

25 Nov, 2024 | 08:22 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை அழிக்கும் பதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

திங்கட்கிழமை (25) பிரதி அமைச்சராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட பலவீனமே கடந்த காலங்களில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்ததில் செல்வாக்கு செலுத்தியது. நாட்டில் போதியளவு சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அது மாத்திரமின்றி சட்டங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை அழிக்கும் பதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு காணப்படுகிறது.

இவற்றை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியில் காணப்பட்ட தடைகள் தற்போது நீங்கியுள்ளன. எனவே இனியும் நாட்டில் சட்ட விரோத போதைப்பொருட்கள் இவ்வாறான காரணிகளால் கைப்பற்றப்படவில்லை எனக் காரணம் கூற முடியாது. அப்பாவி மக்களுக்கு நியாயத்தை வழங்க முடியவில்லை எனில் நாம் பதவிகளை வகிப்பதில் பிரயோசனமில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23