எவ்.ஏ. கிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,தொடரின் அரையிறுதிச் சுற் றின் விறுவிறுப்பான இரண்டு போட்டிகள் சுகததாச விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவுள்ளன.
கடந்த வருடத்தை போன்றே இம்முறையும் பலமிக்க கொழும்பு எவ்.சி கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழக அணிகள் அரையிறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.
அடுத்த அரையிறுதிப் போட்டியில் ரசிகர்களின் ஆதரவினை அதிகளவில் கொண்டிருக்கின்ற ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் மற்றும் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழக அணிகள் மோதுகின்றன.
நடப்பு சம்பியன் இராணுவ அணிக்கும் 2015 சம்பியன் கொழும்பு எவ்.சி. அணிக்கும் இடையிலான போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
இரண்டு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த தேசிய வீரர்கள் இடம்பெறுவதாலும் கால்பந்தாட்ட நுட்பங்களை அவர்கள் வெளிப்படுத்தக்கூடியவர்கள் என்பதாலும் இந்தப் போட்டி இரசிகர்களைப் பெரிதும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப் போட்டியைப் பொறுத்தமட்டில் இராணுவ அணியின் வேகத்திற்கும் கொழும்பு எவ்.சி. அணியின் விவேகத்திற்கும் இடையிலான போட்டியாக அமையவுள்ளது.
கொம்பனித் தெரு, ஜாவா லேன் அணி இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதியில் முன்னாள் சம்பியன் சோண்டர்ஸ் அணியை வெற்றிகொண்டு வரலாறு படைக்க முயற்சிக்கவுள்ளது.
இரண்டு அணிகளிலும் சிரேஷ்ட வீரர்களுடன் இளம் வீரர்கள் இடம்பெறுவதால் இப் போட்டியில் வேகத்திற்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM