மலையகத்தில் வாழும் மக்களின் இருப்பை நிரந்தரமாக்குவதற்கு மக்கள் கிராமங்கள் உருவாக்கப்படுவதோடு எதிர்கால சந்ததியினருக்காக பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கும் எமக்கு உதவியளியுங்கள் என இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் கோரிக்கை விடுத்தது.
குறித்த கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக உறுதியளித்த இந்தியப்பிரதமர் அவ்விடயங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை இந்திய தூதுவர் ஊடாக தனக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்திற்கு விஜயம் செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கிளங்கன் வைத்தியசாலையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததன் பின்னர் நோர்வூட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.அதனைத்தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டக்குழுவினருடன் பிரத்தியேக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இச்சந்திப்பில் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் முத்துசிவலிங்கம் எம்.பி, பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், மத்தியமாகாண சபை அமைச்சர் ரமேஷ்வரன், சபை தவிசாளர் மதியுகராஜா, ஊவா மாகாண சபை அமைச்சரும் உப தலைவருமான செந்தில் தொண்டமான், மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் மற்றும் அனுஷியா சிவராஜா, சிவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தியப்பிரதமர் மோடியுடன் இந்திய தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, வௌிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவிக்கையில்,
இந்தியப்பிரதமர் எம்மை சந்திப்பதற்கு நேர ஒதுக்கீட்டை செய்தமைக்காக நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம். அதனைத் தொடர்ந்து மலையக மக்களுக்காக நான்காயிரம் வீடுகளை வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்தோம். இன்றையதினம் (நேற்று) தனது உரையில் மேலும் பத்தாயிரம வீடுகளை மலையக மக்களுக்காக வழங்கியமைக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்தோம்.
ஆதனைத்தொடர்ந்து நாம் அவரிடத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். குறிப்பாக 200வருட வரலாற்றைக் கொண்ட தோட்டத்தொழிலாளர் அண்மைக்காலமாக இந்த பூர்விக பூமியை விட்டு நகரங்களை நோக்கிச் செல்லுகின்ற நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.
குறிப்பாக தோட்டங்கள் பகிரப்படுதல்இ வௌியாருக்கு விற்பனை செய்வதால் நிலவுரிமையற்றுள்ள மக்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நாம் அரசாங்கத்தின் கவத்திற்கு கொண்டு சென்றுள்ள போதும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாகவில்லை.
இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமாகவிருந்தால் தோட்டத்தொழிலாளர்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். ஏதிர்காலத்தில் ஒரு சமுகம் அடையாளங்களை இழந்து அழிந்து விடும் நிலைமை ஏற்பட்டு விடும். ஆகவே தோட்டத்தொழிலாளர்களின் நில உரிமையை உறுதி செய்யும் வகையில் மலையகத்தில் மக்கள் கிராமங்கள் அமைக்கப்படவேண்டியுள்ளன.
ஆதற்குரிய நிலங்களை பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட விடயங்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னின்று செய்யும். அவ்வாறன நிலையில் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் எனக் கோரினோம்.
ஆத்துடன் மலையக சமுகத்தின் எதிர்காலத்தை உறுதிப்படும் ஒரே ஆயதமாக கல்வி காணப்படுகின்றது. துற்போதைய நிலையில் கல்வித்துறையில் மலையக மக்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றபோதம் பல்கலைக்கல்வி என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை.
இலங்கையில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் மலையக பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பதென்பது குறைவாகவே உள்ளது. ஆகவே விசேட கோட்டா முறைமையொன்றை மலையக மாணவர்களுக்காக மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ளோம்.
எவ்வாறியினும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும் என்பது எமது நீண்டகாலக் கனவாகும். ஆதற்குரிய காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு எமது கட்சி தயாரகவுள்ளது. ஆகவே ஏனைய நிர்மான மற்றும் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளுக்கு தாங்கள் உதவியளிப்பீர்கள் என எதிர்பார்கின்றோம் எனக் குறிப்பிட்டோம்.
ஆத்துடன் இதுவரை காலமும் எமக்காக இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் நெருங்கிய தாய் நாடாக இந்தியாவையே கருதுகின்றோம் என்பதையும் அவரிடத்தில் தெரிவித்தோம்.
இச்சமயத்தில் எமது கோரிக்கைகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறிய இந்தியப் பிரதமர் மோடி அவ்விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை இந்திய தூதரகம் ஊடாக அனுப்பி வைக்குமாறும் தான் அது குறித்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM