இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படும் போது மலையக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். என தமிழ் முற்போக்கு கூட்டணி இந்தியப் பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளது. மலையகத்திற்கு தனியான ஒரு பல்கலைக்கழகம், 25000 வீடுகள், பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேவைப்பாடுகயையும் உள்ளடக்கிய விரிவான மகஜர் ஒன்றையும் அக்கூட்டணி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்துள்ளது.
மலையகத்திற்கு நேற்று வௌ்ளிக்கிழமை விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான பிரத்தியேக சந்திப்பு நோர்வுட்டில் இடம்பெற்றது.
இதன் போது அமைச்சர் மனோகணேசன் தலைமையில் அமைச்சர் திகாரம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்னண், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், அரவிந்த குமார், திலகராஜ், மற்றும் லோறன்ஸ் ஆகியோர் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பிரசன்னமாகியிருந்தனர்.
அதேநேரம் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து, இந்திய வௌிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்கு செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. அவ்வாறான நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்று வரும் போது மலையக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்ட வேண்டும். அவர்களின் இருப்பு ஸ்தீரத் தன்மையாக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் சுட்டிக்காட்டப்பட்டது.
மலையகத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் சொந்த நிலங்களற்றும் இருக்கின்றனர். அவர்களுக்கான சொந்த நிலங்களை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை அம்மக்களின் பிரதிநிதிகளான நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அந்தச் செயற்பாடு முழுமை பெறுவதற்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமானதாகும். அதேநேரம் மலையகத்தில் 25ஆயிரம் வீட்டுத் தேவை காணப்படுகின்றது. தாங்கள் ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகளை வழங்கியுள்ளீர்கள் இன்று (நேற்று) 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதாகவும் கூறியுள்ளீர்கள். அதற்கு எமது நன்றிகள்.
எஞ்சியுள்ள வீட்டுத் தேவையும் தாங்கள் புர்த்தி செய்வீர்கள் என்று நம்புகின்றே?ம். மேலும் மலையகத்தில் பல்கலைக்கழகம் என்பது காணல் விடயமாகின்றது. ஆகவே பல்கலைக்கழகத்தின் அவசியத்தை எமது மக்களும் நாமும் வெகுவாக உணர்ந்துள்ளோம் அதன் நிர்மானிப்புக்குரிய உதவிகளை தங்கள் தலைமையிலான அரசு வழங்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம் இதேபோன்று பாடசாலை அபிவிருத்திஇ ஆசிரியர் பயிற்சிகள் சுகாதார உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் ஆகியவற்றுக்கும் தங்களின் அரசு பங்களிக்கும் என நம்புகின்றோம்.
எமது ஒட்டுமொத்த கோரிக்கைகளையும் விரிவாக உள்ளடக்கிய மகஜரை தங்களிடத்தில் சமர்பிக்கின்றோம் இதற்கு வெகுவிரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM