குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதி 2 வயதும் 2 மாதமுமான ஆண்குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், கல்கமுவ புந்துருவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் வீட்டிலிருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வடக்கு ரயில் பாதை அமைந்துள்ளதால் குழந்தையின் பெற்றோர், குழந்தை ரயில் பாதைக்கு செல்ல முடியாதவாறு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வேலி ஒன்றை அமைத்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று இந்த குழந்தை தனது வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து வடக்கு ரயில் பாதைக்கு ஓடிச் சென்றுள்ளது.
அவ்வேளை, குழந்தையை கண்ட நபரொருவர் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது அக்குழந்தை அதிவேக ரயிலில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM